
ருணம் என்றால் கடன். நரசிம்மருக்கு உகந்த இந்த ருணமோசனம் ஸ்தோத்ரம் மிகவும் சக்திவாய்ந்தது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில் தீர்ந்துவிடும். இந்த பாடல் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் நரசிம்மரின் பெருமையை கூறி கடனை தீர்க்கும்படி வேண்டுவதாக அமைக்கப் பட்டுள்ளது. நரசிம்மரை வேண்டி இந்த ஸ்தோத்ரம் தினமும் பாடி வருபவர்களுக்கு கடன் முற்றிலுமாக அடைந்து செல்வம் சேரும் என்று இந்தப்பாடலின் இறுதி வரியில் சொல்லப்பட்டுள்ளது.
தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்!
ஸ்ரீ நரசிம்ஹம், மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
லஷ்மியாலிங்கித வாமாங்கம்
பக்தானாம், வரதாயகம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
ஆந்த்ர மாலாதரம் சங்க
சக்ராப்ஜ யுத தாரினம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்
கத்ரூஜ விஷ நாசனம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
ஸிம்ஹ நாதேன மஹதா
திக்தந்தி பய நாஸனம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம்
தைத்யேஸ்வர விதாரணம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
க்ரூரக்ரஹை பீடிதானாம்!
பக்தானாம அபயப்ரதம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
வேத வேதாந்த யக்னேஸம்
ப்ரம்ம ருத்ராதி வந்திதம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
யஇதம் படதே நித்யம்
ருணமோசன ஸம் நிக்தம்!
அந்ருணீஜாயதே ஸத்ய :
தனம் ஸீக்ரமவாப்னூயாத!!
இந்த ஸ்தோத்ரம் வெறும் பணம் சம்பந்தப்பட்ட கடனை மட்டுமல்லாமல் நமது கர்மா கடன்களையும் கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கும். இந்த ஸ்தோத்ரத்தை தினமும் பக்தியுடன் பாடி நரசிம்மரின் அருளை பெற்றிடுங்கள்.